Wednesday, April 21, 2010

எங்கே போனது மனிதநேயம்?


இந்த தலைப்புடன் ஒரு செய்தியை நான் இன்று ஒரு செய்தித்தாளில் பார்த்தேன் 

மதுரை கிருஷ்ணபுரம் காலனி அருகே இரவு நேரத்தில் ஒருமுதியவரை யாரோ இரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துவந்து பஸ் ஸ்டாண்டில் விட்டு விட்டு சென்று உள்ளார்கள் 

இதற்க்கு காரணம் அவர்களின் குழந்தைகள் அவரை பார்த்துக்கொள்ள முடியாமல் அங்கு வந்து விட்டு இருப்பார்கள் என நினைப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது 

உலகம் எங்கே செல்கிறது பெற்ற தாய்,  தந்தையை கூட பார்த்துக்கொள்ள முடியாத எந்தனையோ நாய்கள் இந்த உலகத்தில் இருக்கிறது



அந்த முதியவரிடம் எல்லாரும் கேட்டார்களாம் உங்களின் ஊர் எது? உங்களை யார்வந்து இங்கு விட்டது? என்று எல்லாம் கேட்டு இருக்கிறார்கள் ஆனாலும் அந்த முதியர் ஒன்றுமே சொல்லவில்லையாம் 

அந்த முதுகெலும்பு இல்லாத மகன் அல்லது மகள் பெயரை சொல்ல அவர் வாய் கூசியதோ  என்னவோ

அவனுக்கு தெரியாதுபோல இன்னும் ஓரிரு வருடங்களில் இவனும் அல்லது இவளும் முதுமை அடையக்கூடும் 

அவனுடைய குழந்தைகளும் அவனை இதுபோல எங்காவது விட்டுசெல்ல நேரும் அப்போது தெரியும் 

நிம்மதி இல்லை நிம்மதி இல்லை என்று நித்தியானந்த போன்ற சாமியார்களிடம் சென்று.

இருக்கும் பொன் பொருட்களை எல்லாம் விட்டு விட்டு வருகிறார்கள்

கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது கோயில்களுக்கு சென்று வருகிறார்கள் 

எல்லாம் எதற்காக? புண்ணியத்திற்காக , இந்த உலகத்தில் நன்றாக வாழவேண்டும் என்றும்!!  

பெற்ற தாய்,  தந்தையை பாதுகாத்து அவர்களின் கடைசிகாலத்தில் அவர்களின் தேவையை பூர்த்திசெய்தால் எல்லாவகையான செல்வங்களும் நம்மை வந்து சேரும் 

அது தெரியாத நாய்கள் இருக்கும் வரை இதுபோல வயதான முதியவர்கள் கஷ்ட படுவது யாராலும் தடுக்க முடியாது 

பணத்தால் தள்ளிவைக்க, தவிர்க்க முடியாதது முதுமை. 
அனுபவங்களின் உறைவிடம், பொக்கிஷம் முதுமை. 
அனைவரும் ஒரு நாள் இறங்க வேண்டிய வாழ்க்கை நிறுத்தம் இது. 
முதுமையை ஆதரிப்போம்! முதுமைக்கு தலை வணங்குவோம்!!

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வதை விட , கண்ணுக்குத் தெரிந்த கடவுள் ஆன தாய் தந்தைக்கு சேவை செய்ய வேண்டும்!!

-நிதிவாணன் 

 

No comments:

Post a Comment