Wednesday, September 23, 2009

தேச(த்தின்) துரோகம்


இந்திய தேச(த்தின்) துரோகம்:

26.09.1987 இந்திய வரலாற்றின் அவமானகரமான நாள்.

இரக்கம் என்பது துளி கூட இல்லாது ஒரு இளம் வாலிபன் இந்திய அரசாங்கத்தால் கொல்லப்பட்ட நாள்.

யாழ் நகரின் அரசியல் பிரிவு தலைவர் லெப் கர்னல் திலிபன் அவர்கள் மறைந்த நாள்.

அவர் செய்தது அறப்போர் தான் மறப்போர் அல்ல.

உண்ணா விரதம் இருந்து உயர் நீத்தார்.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் உன்ன விரதம் இருந்து மறைந்ததாக தெரியவில்லை.

அன்னைக்கு காந்திலேர்ந்து இன்னைக்கு கருணாநிதி வரைக்கும் இதே தான் நிலைமை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாக பேசிக்கொள்ளும் இந்திய திரு நாட்டினால் ஒரு இளம் போராளி உயரை விட்ட நாள்.

அமைதியான வழியில் போராடிய ஒரு வீரனுக்கு ஒரு ஜனநாயக தேசத்தால் கொடுக்கப்பட்ட தண்டனை மரணம்.

அன்று முதல் இன்று வரை இந்தியா தனது முடிவில் உறுதியாக இருக்கிறது.

ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தியாவை நம்பி கெட்டவர்கள் ஈழ தமிழர்கள்.  

தியாக தீபம் என்றழைக்கப்படும் திலிபனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.