Saturday, March 13, 2010

நித்தியானந்தா - இருந்தாலும் 1000 பொன் இறந்தாலும் 1000 பொன்



நித்தியானந்தா இந்த பெயரை தெரியதவர்களே இருக்க முடியாது காரணம் இப்போது எங்கு பார்த்தாலும் இதே பெயர்.


இவருடன் சேர்த்து ரஞ்சிதாவின் பெயரும்!! அந்த அம்மா சினிமாவில் பெயர் வாங்கியதை விட இந்த செய்தியில் நல்லா பாப்புலர் ஆகிட்டாங்க.



ப்ளாக் பார்ப்பது என்னுடைய பொழுதுபோக்கு, இப்ப ப்ளாக்க பார்த்தாலே தல வலி காரணம் நித்தியானந்தா ரஞ்சிதா.


எல்லாரும் இதையே தான் எழுதுறாங்க (எழுதுபவர்களை மட்டும்)

காமத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு அழகான பெண் கிடைத்தால் அவனுக்கு அது சொர்க்கம் அதுவே நூறு பெண்கள் கிடைத்தால் அது தான் நரகம்.


அதை போலத்தான் ஒருநாள் அதை படித்தேன் நன்றாக இருந்தது, அதையே மறுபடி மறுபடி பார்த்தால் என்னால முடியல.

ப்ளாக் எழுதுறவங்க எல்லாரும் நல்ல சித்தனை உள்ளவங்க (அப்டின்னு தான் நினைக்கிறேன்), ஆனால் அதையே இப்படி சின்ன சின்ன விசயத்துல விட்டுவிட கூடாது.


சிந்தனை என்பது நதி மாதிரி. ஓடிக்கொண்டே இருந்தால் அது நதி ஒரே இடத்தில் நின்று விட்டால் அதுக்கு பெயர் குட்டை!!

முதல்ல எல்லாரும் சன் டிவி காசு பார்க்குறாங்க விஜய் TV காசு பாக்குறாங்க நக்கீரன் என்று எல்லாரும் எல்லாரையும் விமர்சனம் செய்தார்கள்

இப்ப இவங்க என்ன செய்றாங்க? அவன் முதல் போட்டு இருக்கான் அவன் அதை எடுக்க பார்க்கிறான். 


நீங்க ஒண்ணுமே போடல ஆனாலும் எதுக்காக விழுந்து விழுந்து எழுதுறிங்க Tamilishla Vote வாங்க!!! 


இப்படி பார்த்தால் எல்லாரும் ஒன்னுதான்

ஒரு செய்தி படித்தேன் என்னன்னா நித்தியானந்தா ரஞ்சிதா போட்டோவை Google ல தேடியதில் 10 வது இடம் எல்லாருக்கும் வேற வேலையே இல்லையா இது நாட்டுக்கு ரொம்ப தேவையான ஒரு செய்தி தானா?





இந்த மாதிரி செய்தி போட்டு விட்டில் உள்ள சிறுவர்கள் எல்லாரையும்  கெடுத்திட்டாங்க. 


இதனால இந்த செய்தி வந்த முதல் சில நாட்கள் விட்டில் பெரியவங்க வேலைக்கு செல்லும் பொது கேபிள் இணைப்பை கட் பண்ணிட்டு போனாங்க தெரியுமா உங்களுக்கு? (எனக்கு தெரிந்தவர்கள் விட்டில் கூட நடந்தது)

முதல்ல சொன்னங்க போலி சாமியார்களை மக்கள் எல்லாருக்கும் காட்டுறோம் சரியப்பா காட்டியாச்சு நிறுத்துங்க இன்னும் எதுக்க மறுபடி மறுபடியும்.

விஜய் டிவில "நடந்தது என்ன" நிகழ்ச்சி Sunday சொன்னங்க நாளை என்று ஆனால் அவங்க போட்டது இரண்டு நாள் கழித்து என்னுடைய வேலை முடிந்த பிறகு ப்ளாக் எல்லாம் படித்து விட்டு ரூம்க்கு செல்வது 10 மணிக்கு மேலேதான். 


என்னுடைய நண்பன் சொன்னான் மாமா என்னடா இன்னைக்கு ராத்திரி என்று சொன்னான் ஆனால் இன்னைக்கும் போடலடா என்று இப்[படி சொல்லி சொல்லி ரேட்ட சாஸ்தி பண்ணுறது

நான் ஒன்று சொல்லுகிறேன் நித்தியானந்தா ஒரு யானைக்கு சமம் எப்படி தெரியுமா ???????????????????

அவர் இருந்தாலும் 1000 பொன் (அவருக்கு), இறந்தாலும் 1000 பொன்(மீடியாவுக்கு)!!

அவன்(ர்) நல்லா இருக்கும் பொது அவன் காசு சேர்த்தான் இப்ப அவன் கெட்டவன் ஆன (மாட்டிகிட்ட) பிறகு டிவி பேப்பர் எல்லாருக்கும் நல்லா பணம்..

அய்யா சாமி ப்ளீஸ் வேண்டாம் விட்டுருங்க ப்ளீஸ்

வடிவேலு மாதிரி சொன்னா,
1 . போங்க தம்பி வேறவேலை எதாவதும் இருந்தா பாருங்க!
2 . ஏங்க இப்டி கப்பித்தனமா எழுதிகிட்டு? போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பு! !