Wednesday, September 8, 2010

என்னத்த சொல்ல!!!


இன்று காலை நான் அலுவலகத்திற்கு வந்த உடன் என்னுடன் பணிபுரியும் சக நண்பர்கள் என்னிடம் வந்து பக்கத்து தெருவில் சாமி வந்திருக்கிறது பார்த்து விட்டு வருவதாக சொன்னார்கள் 

நானும் நம்ம ஊரில் வரும்ல அதை போல சாமி ஆடிக்கொண்டு வருவார்கள் அவர்கள் காலில் மஞ்சள் தண்ணி ஊத்தி வழிபடுவர்கள் அல்லவா அது போல தான் இருக்கும் அதை தான்  பார்க்க செல்கிறார்கள் என்று நினைத்தேன் 

ஆனால் அங்கு சென்று பார்த்தால் அங்கு வந்திருந்தது ஒரு பசு மாடு பார்பதற்கு நம்ம  ஊரு பும் பும் மாடுபோல் இருந்தது 

ஆனால் இது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது நம்ம ஊரில் வீடு வீட்டுக்கு சென்று கொட்டடித்து இந்த வீட்டில் நல்ல காரியம் நடக்குமா? என்று கேட்டு விட்டு அந்த கொட்டை அடிப்பார்கள் அதுஉம் தலலையை ஆட்டும் அதற்கு  ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்லது அரிசி எதாவது ஒன்றை கொடுத்து அனுப்புவார்கள்.

அந்த காசு கொடுப்பதற்கு காரணம் அந்த பசுவின் உடலை பார்த்துதான் காரணம் அதைபார்க்கவே பாவமாக இருக்கும் இன்றோ நாளையோ சாகபோரமாதிரி இருக்கும். அவர்கள் எடுப்பது ஒருவகை பிச்சை தான்.

ஆனால் இங்கு நான் பார்த்த அந்த பசு மிகவும் ஆரோக்கியத்தோடு இருந்தது இந்த பசு யாரையும் தேடி செல்வது இல்லை.

இந்த பசு இருக்கும் இடத்திற்கு தான் ஊரே வருகிறது அது நிற்க்கும் இடத்திற்கு காலில் செருப்பு போட்டுக்கொண்டு போக கூடாது சொல்லப்போனால் அது இருக்கும் இடம் ஒரு கோவில் போல் இருக்கிறது.

அதன் காலில் வெள்ளி கொலுசு முகத்திலும் வெள்ளியால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது!!

மிக முக்கியமான ஒன்று அந்த பசுவின் மீது குறைந்தது சுமார் பத்து லட்சம் ரூபாயாவது இருக்கும் அதை பார்த்ததும் எனக்கு மிகுந்த ஆச்சரியம் உடனே என்னுடைய செல்லில் நான் புகைப்படம் எடுத்தேன் அதை பாருங்கள் 

பின்னர் அந்த பசுவை (அந்த தெய்வத்தை) பற்றி எல்லாரிடமும் கேட்டு பல தகவல்களை தெரிந்து கொண்டேன்  

இந்த பசுவின் முன்னால் நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை நினைத்துக்கொண்டு  கைகளை நிட்டினால் அது நாம் கைமீது கால்களை வைத்தால் நாம் நினைத்து நடக்குமாம். நாம் நினைத்தது நடக்காது என்றால் நாம் கை மிது கால் வைக்காதாம் 

அதுபோல அந்த பசுவின் முன்பு படுத்துக்கொண்டால் நாம் நினைத்தது நடக்கும் என்றால் அந்த பசு நம்மை தாண்டும் இல்லை என்றால் தாண்டாதாம் 

அது தலையில் இருக்கும் ரூபாய் நோட்டு கிழே விழுந்தாலும் விழுந்த இடத்தில் அப்படியே நின்று விடுமாம்

அதன் தலையில் இருந்து யாராவது பணத்தை எடுத்தாலும் அவர்களின் விடு முன்னால் போய் நின்று விடுமாம் அவர்கள் பணத்தை தரும் வரை அங்கேயே இருக்குமாம்.

இந்த பசுவின் தலை மேல் இருக்கும் பணத்தை ஒரு முறை வங்கியில் செலுத்தி உள்ளனர் அந்த பணத்தை அதன் தலை மேல் வைக்கும் வரை வங்கியின் முன்னால் இருந்து போகவே இல்லையாம்  

இந்த கடவுளுக்கு கோவில் கர்நாடக மாநிலம் மண்டிய மாவட்டம் மதூர் என்ற ஊரில் கோவில் இருக்கிறதாம் 

என்னத்த சொல்ல??