Wednesday, November 25, 2009

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்

இன்று பிறந்த எம் தலைவா!
என்றும் வாழும் எம் குலக்கொழுந்தே!
எம் இன மானம் காத்த மன்னவனே!
மண்ணின் மைந்தர்களுக்காகவே வாழும் மாவேந்தே!
தமிழருக்கென்று தனி நாடு படைத்த தங்கத்தமிழா!
கொள்கை கொன்று ஆள்வோர் நடுவில்,
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்  என
கொள்கை கொண்டு  ஆளும் எம் அரசே!
தமிழனாய் பிறந்ததற்காய் எம்மை
பெருமை கொள்ளச் செய்த பெருமானே!
மனிதப் பேரவலதிலும், மனித நேயம் காத்த காவலனே!
நீ பிறந்த இனத்தில் பிறந்ததற்காய்
நாமும் பெருமிதம் கொள்கிறோம்!
தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற தமிழா!
உன் பிறந்த நாளில் உன் வேட்கையே
இனி எம் வேட்கை.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்!
எவ்வழியிலாயினும்!!!